omam benefits in tamil: ஓமம் கலந்த தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா!!!

1 min read
omam benefits in tamil-vidiyarseithigal.com

omam benefits in tamil

வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நமது வீட்டிலிருக்கும் சிறப்பான மருந்து தான் ஓமம். இதில் உள்ள ஆக்டிவ் என்சைம்கள் வயிற்று வலி, வாயு தொல்லை, அஜீரணம் உள்ளிட்ட வயிற்று பிரச்சனைகளை போக்க சிறந்த ஒன்றாகும். வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் ஓமம் சிறந்த ஒன்று என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல்: (benefits of omam in tamil)

ஒரு சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து கொண்டு காலை, மாலை எடுத்து கொண்டால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

omam benefits in tamil-vidiyarseithigal.com

omam benefits in tamil

மந்தம்:

மந்தம் பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வு, அஜீரண கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

debit and credit card meaning tamil; என்ன வித்தியாசம் இருக்குனு பாருங்க..!

பசி தூண்ட:

ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் மற்றும் நல்ல பசி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறான் என்று அர்த்தம். தூக்கம் குறைந்தால் மன அழுத்தம், நோய் பரவல் ஏற்படும். உடலில் பசியை தூண்டி உண்ட உணவு சீரணமாகி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர ஓமத்தை கஷாயமாக்கி (omam water benefits in tamil) குடிப்பது நல்லது.

இடுப்பு வலி போக்க:

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

Spread the love
x