ஐயையே.. யாரு சாமி இவரு…? உலகின் மிக அழுக்கான மனிதர்…!

1 min read
iran-vidiyar

உலகில் பல வித்தியாச மனிதர்கள் உள்ளார்கள். இதில் இந்த மனிதர் கடந்த 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் வாழ்ந்து வருகிறாராம். இது மட்டும் இல்லை இவர் தான் உலகின் அழுக்கான மனிதராம்!. யார்தான் இந்த அழுக்கான
மனிதர்?.

இவரது பெயர் அமோ ஹாஜி. ஈரானில் வசிக்கும் இவருக்கு 83 வயதாகிறது. இதி வேடிக்கை என்ன தெரியுமா… குளித்தாலோ, தண்ணீர் உடலில் பட்டாலோ தனக்கு நோய் வந்துவிடும் என்பது அவரது ஆழ்மனதில் ஊறிவிட்டது. இதனாலேயே கடந்த 65 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லையாம். ஏன்? ஒரு சொட்டு தண்ணீர் கூட அவர் உடலில் படவில்லையாம். இவருக்கு சிகரெட் பிடிப்பதில் பிரியம் கொண்டிருக்கிறார்.

இது மட்டுமில்லை, குளிக்காததால் தான், உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைக்க முடிகிறது என கூறுகிறார் இந்த அழுக்கு மனிதர். குளிக்காமல் இருப்பதால் இவரால் மக்களோடு மக்களாக வசிக்க முடியாமல், கிராமத்திலிருந்து தொலைவில் தரையில் கட்டப்பட்ட குழிகளில் வசிக்கிறார்.

தண்ணீரை கண்டால்தான் பயம் என பார்த்தால் இவருக்கு உணவுப்பழக்கமும் வித்தியாசமாக இருக்கிறது. வீட்டில் சமைத்த உணவுகள் இவருக்கு பிடிக்காதாம். இறந்த விலங்குகளின், அழுகிய இறைச்சியை சாப்பிட தான் பிடிக்குமாம். வாந்தி எடுத்து விடாதீர்கள்.. இன்னும் கேளுங்கள்.. சாலையில் விபத்தில் அடிபட்டு இறந்த விலங்குளின் கெட்டுப்போன இறைச்சியை விரும்பி ரசித்து சாப்பிடுவாராம்.

Spread the love
x