world news tamil: கொரோனாவால் இறந்த பாட்டி..! மீண்டும் வந்த பாட்டி…! குழப்பத்தில் குடும்பம்..!

1 min read
world news tamil-vidiyarseithigal.com

world news tamil

ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி ரோஜெலியா ப்ளாங்கோ. அவர் கொரோனாவால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கபட்டுள்ளது. கொரோனாவால் இறந்த காரணத்தினால் அவரது உடலை பார்க்க யாரும் வரவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே துக்கம் அனுசரித்துள்ளனர்.

இந்நிலையில் 10 நாட்கள் கழித்து அவர் முதியோர் இல்லத்திற்கு வந்துவிட்டதாக அதே முதியோர் இல்லத்தில் இருந்து அந்த குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனை கேட்ட குடும்ப உறுப்பினர்கள் அதிர்ந்து போயுள்ளனர். இறந்த நபர் எப்படி வந்தார் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

world news tamil-vidiyarseithigal.comworld news tamil

அதன்பின் தான் உண்மை தெரியவந்துள்ளது. இறந்து போனது ரோஜெலியா அறையில் இருந்த வேறொரு மூதாட்டி என்று தெரிந்துள்ளது. பின்னர் ரோஜெலியா அறையில் உயிருடன் இருப்பதாக சொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவரை பார்பதற்கு வந்துள்ளனர். ஆனால் அவர் 10 நாட்களுக்கு முன்பாகவே இறந்துள்ளார் என்ற செய்தியை கேட்ட அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

இந்த சம்பவம் இரு குடும்பத்தார் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

Spread the love
x