viral photos: மீனவர் வலையில் சிக்கிய காவி நிற தாமரை வடிவிலான நண்டு ..! வைரல் புகைப்படங்கள்..!
1 min read![viral photos-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/1.jpg)
viral photos
வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் பிடித்து இருந்த போது அவர்களது வலையில் அதிசய தாமரை வடிவிலான நண்டு சிக்கியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தரங்ககம்பாடி, பெருமாள்பேட்டை, செருதூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்:
அதிசய நண்டு:
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி உள்ளனர். அதில் சங்கரா, பன்னா, நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு போன்ற மீன் வகைகள் கிடைத்துள்ளன. அப்போத் பாம்பம் மீனவர் வலையில் அதிசய நண்டு சிக்கியுள்ளது.
![viral photos-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/1-300x142.jpg)
![](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/2-300x174.jpeg)
அந்த நண்டின் முன்புறம் காவி நிறத்திலும், பின்புறத்தில் தாமரை பூ போல இருந்துள்ளது. இது பற்றி அவர்கள் கூறுகையில் இதுபோன்ற தாமரை வடிவிலான நண்டினை பார்த்ததில்லை என கூறியுள்ளனர்.