ஒரே நாளில் பறிபோன இரண்டு பிஞ்சு உயிர்கள்..! பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய தாய் கண் கலங்க வைக்கும் சம்பவம்..!
1 min readதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனி-பாஞ்சாலை தம்பதியினர். இவர்களுக்கு யாசினி என்ற 6 வயது பெண் குழந்தையும், ஹரி என்ற 4 வயது ஆண் குழந்தையும் உள்ளது. பொங்கல் பண்டிகைகாக வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் இனிப்பு பலகாரம் வாங்கி வந்துள்ளார்.
குழந்தைகளுக்கு பலகாரத்தை சாப்பிட பெற்றோர்கள் கொடுத்துள்ளனர்.பலகாரத்தை சாப்பிட்ட குழந்தை யாசினி உடனடியாக மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துபோயுள்ளார். அன்றைய இரவே மகன் ஹரியும் மயக்கமடைந்துள்ளார். பதற்போன பெற்றோர்கள் மகனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து குழந்தைகள் இறந்து போனதால் பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் குழந்தைகள் கடைசியாக விளையாட பயன்படுத்திய பொம்மைகளை தாய் பாஞ்சாலை எடுத்து மடியில் வைத்து கொஞ்சியது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.