13 வயது மாணவன்..! திருமண தோஷம் கழிப்பதற்காக திருமண செய்த ஆசிரியை..!

1 min read
marriage-vidiyarseithigal.com

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ஒருவர் நீண்ட காலமாக திருமண ஆகாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் அவருக்கு ஜாதகம் பார்த்ததில் அவருக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை போக்க அவர் மைனர் சிறுவனை அடையாள திருமணம் செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர் தன்னிடம் டியூசன் படித்த 13 வயது மாணவனை திருமணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். மாணவனின் பெற்றோரிடம் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என கூறி ஒருவாரம் அவரது வீட்டிலேயே மாணவனை தங்க வைக்க அனுமதி கேட்டுள்ளார். இதனை மாணவனின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்ததாகவும், இந்த திருமணத்தின் போது மெகந்தி முதல் முதல் இரவு வரை அனைத்து சம்பிரதாயங்களும் நடைபெற்றது தெரியவந்துள்ளது. அதன்பின் திருமண முறிவுக்காக வளையல்களை உடைத்து சம்பிரதாயங்கள் நடைபெற்றுள்ளது.

இது குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் வீட்டிற்கு சென்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து ஆசிரியரின் பெற்றோர்கள் மாணவரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர். பின்னர் மாணவரின் பெற்றோர்கள் புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
x