tamilnewsupdates: 1 மணி நேரத்தில் 11 தேங்காய்கள்..! வித்தியசமான முறையில் உரித்து சாதனை படைத்த முதியவர்..!

1 min read
tamilnewsupdates-vidiyarseithigal.com

tamilnewsupdates;

இளமையில் தான் சாதனைகள் செய்ய முடியும் என்றில்லை . சாதனை செய்ய வயசு ஒரு தடை இல்லை என்பதை கரூரை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் நிருப்பித்துள்ளார்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் அவருக்கு வயது 67. தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சிறு வயது முதலே தேங்காய் உறித்து மட்டை நீக்குதலில் ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார். தேங்காயை கையிலும் , எளிதாக உரிக்க இயந்திரத்தையும் பயன்படுத்துவர்.

ஆனால் இவரோ சற்று மாறாக தேங்காயை காலால் உரித்து வருகிறார். பல்வேறு நேரத்தில் தேங்காய் மட்டையை நண்பர்கள் முன்னால் உரித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். இதனை சாதனையாக செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதற்கு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

tamilnewsupdates-vidiyarseithigal.comtamilnewsupdates

கரூர் நகராட்சி சந்தையான காமராஜர் பகுதியில் உள்ள மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தன. அங்கு வந்த பாலகிருஷ்ணன் உரிப்பதற்கான தேங்காயை மட்டையுடன் தேர்வு செய்தார். பின்பு அந்த தேங்காயை மண்ணில் வைத்து தனது கால்களால் உரிக்க தொடங்கினார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

அவரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அவர் 1 மணி நேரத்தில் 11 தேங்காய்களை கால்களால் உரித்து சாதனை படைத்தார். இது குறித்து பேசிய அவர் இதுபோன்ற சாதனையை என் வயதில் யாரேனும் செய்து இருக்கிறார்களா என தெரியவில்லை. நான் இந்த சாதனை செய்தது என மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Spread the love
x