tamilnewsonline: இனி சொந்த ஊருக்கு போகமலே வாக்களிக்கலாம்..! அசத்தும் தேர்தல் ஆணையம்..!

1 min read
tamilnewsonline-vidiyarseithigal.com

tamil online news

தேர்தல் காலங்களில் வெளியூரில் பணிபுரியும் மக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இனி அப்படி இல்லாமல் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் வாக்களிக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது.

ரிமோட் வோட்டிங்க்:

டெல்லியில் நடைபெற்ற சன்சாத் ரத்னா விருதுகள் 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த புதிய தொழிநுட்பம் மூலம் மக்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

எலெக்ஷன்2024:

இந்த தொழிநுட்பத்தை சென்னை ஐஐடி தொழிநுட்ப வல்லுநர் குழுவினர் உருவாக்கி வருகின்றனர் எனவும் இந்த ரிமோட் வோட்டிங் முறை சோதனை ஒட்டம் 2 அல்லது 3 மாதங்களில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வெற்றிபெற்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Spread the love
x