tamil news online: தனியாக நின்ற கான்ஸ்டபிள்..! அரண் அமைத்து காத்த விவசாயிகள்..! நெகிழ்ச்சி சம்பவம்..!

1 min read
tamil news online-vidiyarseithigal.com

tamil news online

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய டெல்லியில் இருந்து ஐடிஓ பகுதிவரை விவசாயிகளின் ஒரு பிரிவினர் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர்.

tamil news online-vidiyarseithigal.comtamil news online

இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்ட போது ஒரு கான்ஸ்டபிள் மட்டும் தனியாக விவசாயிகள் கூட்டத்திற்கு மத்தியில் மாட்டிக் கொண்டார்.

அவரை மற்றவர்கள் தாக்காத வகையில் சில விவசாயிகள் அரண் அமைத்து காத்தனர். தாக்க வந்தவர்களிடம் இருந்து சற்று தூரம் வரை அரண் அமைத்து பாதுகாப்பாக அவரை அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Spread the love
x