tamil cinemanews: சித்ரா தற்கொலை வழக்கு ..! வெளியான காவல்துறை அறிக்கை..!

1 min read
tamil cinemanews-vidiyarseithigal.com

tamil cinemanews

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதில் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவின் நடத்தையில் சந்தேகபட்டதால் தான் என அந்த அறிக்கையில் உள்ளது.

மேலும் சித்ரா தற்கொலை செய்துகொண்டதற்கான காயம் ஏதும் கழுத்தில் இல்லை என  பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
x