தஞ்சை: பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி..!

1 min read
corona-vidiyarseithigal.com

தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பெற்றோர் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 800ஐ கடந்து பதிவானது. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிப்பெறும் பள்ளியில், கடந்த 8ம் தேதி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

அதனையடுத்து பிற மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. மேலும் 36 மாணவிகளுக்கும், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்ட மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

Spread the love
x