Tamil online news: பள்ளி திறந்ததும் இப்படியா ? சக மாணவியை பள்ளியிலேயே..!
1 min read![tamil onlinenews-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/marriage-1-1024x560.jpg)
tamil online news
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த வந்த நிலையில், கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் உடன் படிக்கும் மாணவிக்கு பள்ளியிலேயே வைத்து தாலி கட்டிய மாணவன் உட்பட 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கபட்டுள்ளனர். மேலும் அந்த மாணவர் மீது திருமண பாதுகாப்பு சட்டம் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருமணமான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து , தோழர்களாக இருந்து வருகின்றனர் என்றும் நாளடைவில் நட்பு காதலாக மாறி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களின் திருமணத்திற்கு உதவிய மூன்று பேரையும் பள்ளியில் இருந்து டிசி கொடுத்து அனுப்பி உள்ளனர். திருமணமான மாணவர்களின் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.