கையை விட்டுட்டு பைக் ஒட்டுவேன் ..! ஸ்டண்டால் போலீசில் சிக்கிய இளம்பெண்கள்..!வீடியோ..!

1 min read
News-vidiyarseithigal.com

பொதுமக்களுக்கு இடையூரு ஏற்படுத்தும் வகையில் பைக் ஸ்டண்டில் ஈடுபடும் இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தான் செய்யும் பைக் ஸ்டண்டை பிரபலமடைய செய்ய வேண்டும் என நினைத்து பைக் ஸ்டண்ட் செய்த பின் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த இரு பெண்களையும் காஜியாபாத் போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கு இடையூராக சென்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்து வகையில் வாகனத்தை ஒட்டியது விசாரணையில் உறுதியானது.

https://www.instagram.com/reel/CMcRYa_DtEo/?utm_source=ig_embed 

அதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் போலீசார் ரூ.11,000 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு பைக்கினை கொடுத்த இளைஞருக்கு ரூ.17,000 அபராதம் விதித்துள்ளனர்.

Spread the love
x