online news: காதலியுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்..!

1 min read
online news-vidiyarseithigal.com

online news

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள வைரவிகுலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் . இவர் திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகபடுத்தியுள்ளார்.

online news-vidiyarseithigal.com

online news

இதனிடையே அந்த பெண்ணை ஜனவரி 6ம் தேதி அந்த பெண்ணின் வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன்பின் அந்த பெண் அவருடன் சரியாக பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போன ஆனந்தராஜ் . இன்று அதிகாலை 5.30 மணியளவில் கல்லிடைகுறிச்சி பழைய காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தன் காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிண்றனர்.

Spread the love
x