mk stalin: சசிகலா வெளியே வந்ததும் முதல்வராக பழனிசாமி இருப்பாரா என்பது கேள்விகுறி ? – ஸ்டாலின் ..!

1 min read
mk stalin-vidiyarseithigal.com

mk stalin

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பாரா என்பது கேள்விகுறியாக உள்ளது என கூறினார். மேலும் கொரோனா தொற்றில் அரசாங்கம் முன் வராத நிலையில் திமுகதான் ஒன்றினைவோம் வா என கூறி மக்களுக்கு கலப்பணி ஆற்றி உள்ளது என்றார்.

இங்குள்ள கூட்டத்தை பார்த்தால் மகளிர் அணி மாநாடு போல உள்ளது என கூறிய ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி நாம் தான் என்றும் அதற்கு காரணம் திமுக சார்பில் நடத்தபட்ட ஊராட்சி சபை கூட்டம் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

10 வருடமாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றி உள்ள கட்சி திமுக என ஸ்டாலின் (mk stalin)  தெரிவித்தார்.

Spread the love
x