சிறுவர்கள் கொலை…! சடலத்துடன் பாலியல்…! அதிர்ச்சியடைந்த காவல்துறை..!

1 min read
arrest-vidiyarseithigal

ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் தடேபள்ளி என்ற பகுதி உள்ளது. கடந்த மார்ச் 14ம் தேதி அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுவனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் வந்துள்ளது. அதைப்போல பிப்ரவரி 11ம் தேதி ஒரு சிறுவனை காணவில்லை என புகார் வந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளில் தடயம் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் கை , கால்கள் உடைந்த நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கபட்டுள்ளது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கபட்டு , அடித்து சொலை செய்யபட்டது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த கோபி என்ற இளைஞர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அவர் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுரித்து பேசிய போலீசார் சிறுவனை கடத்தி கொன்றதை கோபி ஒப்புக்கொண்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சிறுவனை இதை போன்று கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து கொன்று பங்கிகாம் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Spread the love
x