Tamil news online : என்னை கடிக்க வந்தது..! கூலிப்படை வைத்து நாயை கொன்ற இருவர் கைது..!

1 min read
tamil news online-vidiyarseithigal.com

Tamil  news online

மதுரை செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ் இவர் தெரு நாய் ஒன்றினை உருட்டு கட்டையால் மண்டையில் அடித்து பின் அதனை பிளாஸ்டிக் பை ஒன்றில் கட்டி எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செலூர் காவல்நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின் நாயை அடித்து கொன்றது செல்லூர் கண்மாய் கரை கணேசபுரத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பது கண்டுபிடிக்கபட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவகாமி தெருவை சேர்ந்த முத்துசரவணன் என்பவர், தினமும் தன்னை இந்த நாய் கடிக்க வருவதாக கூறி ரூ.500 கொடுத்து கொல்ல சொன்னார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

கொரோனா காரணமாக வேலை இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு நாயை கொலை செய்தேன் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் முத்துசரவணனையும் கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
x