தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!

1 min read
death-vidiyarseithigal

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி. அவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு சடங்கு செய்வதற்கு உறவினர்கள் பலர் மயானத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு மயானத்தில் தேன் கூடு ஒன்று இருந்துள்ளது. அதில் இருந்த தேனீக்கள் திடீரென அங்கிருந்தவர்களை தாக்கியது. தேனீக்கள் தாக்க தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் ஓட தொடங்கினர். இருப்பினும் தேனீக்கள் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

தேனீக்கள் தாக்கியதில் காயமடைந்த அனைவரும் அரசு மாருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டிருந்தனர். ஆனால் அதில் சிகிச்சை பலனின்றி ராஜா என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x