Lockdown: இன்று முதல் ஒருவாரம் ஊரடங்கு..! வெளியான அறிவிப்பு..!

1 min read
lockdown-vidiyarseithigal.com

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாக்பூரில் மார்ச் மாதத்தில் மட்டும் கடந்த 14 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக நாக்பூரில் இன்று முதல் மீண்டும் ஒருவாரக் கால ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.அத்தியவசிய சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் சாலையில் அனுமதிக்கபட்டுள்ளன.

Spread the love
x