ipl 2021: சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடருவாரா? சஞ்சய் பங்கர் விளக்கம்..!

1 min read
ipl 2021-vidiyarseithigal.com

ipl 2021

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடருவது சந்தேகம் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சிறந்த அணியாக சென்னை அணி திகழ்ந்து வருகிறது. அதற்கு முக்கிய பார்க்கப்படுவது தோனியின் கேப்டன்சி தான். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், தோனியை அருகில் இருந்து பார்த்து புரிந்து கொண்டவன் நான்.

2011 உலக்கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன்சி பொறுப்பை மற்ற வீரர்களிடம் ஒப்படைக்கவே தோனி விரும்பினார். இருப்பினும் அந்த நேரத்தில் சரியான வீரரை தேர்வு செய்ய காத்திருந்தார் தோனி பின்னர் நேரம் வந்ததும் கோலியிடம் கேப்டன்சி பொறுப்பை கொடுத்துவிட்டு இந்திய அணியில் வீரராக விளையாடினார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

அதை போல இந்த முறை ஐபிஎல் ( ipl 2021) போட்டிகளில் சென்னை அணியை வழிநடத்தும் வாய்ப்பை தோனி டூப்பிளசிஸ்யிடம் கொடுப்பார் என நினைக்கிறேன் என்றும் டூப்பிளசிஸிக்கு அந்த திறமை உள்ளதாக தோனி தெரிவித்துள்ளார் என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.  

Spread the love

More Stories

x