latest news update: இந்தியாவிற்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்..! அதில் ஒன்று தமிழ்நாட்டிற்கு- சீமான்..!

1 min read
latest news update-vidiyarseithigal.com

latest news update

இந்தியாவிற்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்று மேற்குவங்க மாநில மம்தா பானர்ஜியின் கருத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.

இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில்” ஒரே நாடு, ஒரே தலைவர் எனும் அணுகுமுறை ஏற்புடையதல்ல; எல்லாவற்றிக்கும் டெல்லியை சார்ந்து இருக்க வேண்டும்? தலைநகரங்கள் பரவலாக்க வேண்டும். இந்திய நாட்டிற்கு 4 தலைநகரங்கள் வேண்டும் என்ற சகோதரி மம்தா பானர்கியின் கருத்து காலத்திற்கேற்ற சாலச்சிறந்த கருத்தாகும் . அதனை வரவேற்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகரங்கள் பரவலாக்கபட்டால் தான் கடைக்கோடி வரை வளர்ச்சியை கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்தே தமிழ்நாட்டில் 5 மாநில தலைநகரங்கள் இருக்க வேண்டும் எனும் முழகத்தை முன் வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அதைபோல சகோதரி மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமிழிந்து , அத்தோடு 4 தலைநகரங்களில் ஒன்று தமிழ்நாட்டில்ரிந்து உருவாக்கபட வேண்டும் எனும் எமது கோரிக்கையை இணைத்து அதனையும் முன் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Spread the love
x