tamil online news: அதிசய ஆட்டுக்குட்டி இரண்டு வாய், இரண்டு நாக்கு..!
1 min read![tamil online news-vidiyarseithigalcom](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/goat.jpg)
tamil online news
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஊராட்சி எலத்தகிரி புனித சவேரியார் நகரில் வசித்து வரும் சார்லஸ், சபரியம்மாள் தம்பதி அவர்களது வீட்டில் செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது செம்மறி ஆடு ஒன்று கருவுற்றிருந்தது.
அந்த செம்மறி ஆடு கடந்த 15ம் தேதி அன்று குட்டியை ஈன்றது. பிறந்த குட்டிக்கு 2 வாய் மற்றும் 2 நாக்கு உள்ளது. பொதுவாக இரண்டு தலை அல்லது இரண்டு கண்களுடன் ஆட்டுக்குட்டிகள் பிறந்திருக்கின்றன அதை நாமும் கேள்வி பட்டிருக்கின்றோம்.
![tamil online news](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/goat-1-300x168.jpg)
ஆனால் இந்த ஆட்டுக்குட்டிக்கு வித்தியாசமாக இரண்டு வாய் மற்றும் இரண்டு நாக்கு உள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை காண அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் அங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
மேலும் வித்தியாசமாக பிறந்த ஆட்டுக்குட்டி தற்போது உடல்நலத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.