covid19: கொரோனா பரவ தொடங்கி ஓராண்டு கழித்து முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்த தீவு நகரம்..!

1 min read
covid19-vidiyarseithigal.com

உலகம் முழுவதும் கொரோனா எனும் பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது. கொரோனா தொற்றால் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கபட்டனர். மேலும் லட்சகணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கி ஒரு ஆண்டு முடிந்த நிலையில் முதல் கொரோனா தொற்று லட்சத்தீவில் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து கொரோனா தொற்றை கட்டுபடுத்தி வருகின்றனர். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவிய கொரோனா தொற்று இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவு சென்ற நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யபட்டுள்ளது. அந்த நபர் தற்போது தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கபட்டு வருவதாக லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love
x