lockdown: நாளை முதல் இரவு நேர ஊரடங்கு..! அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்..!

1 min read
Lockdown-vidiyarseithigal.com

Lockdown

இந்தியாவில கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா 2வது அலையின் முன்னோட்டம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுபடுத்த அம்மாநில அரசு போர்கால முறையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச அரசு இரண்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தபடும் என்றும், ஜபல்பூர், குவாலியர், ரத்லாம் போன்ற 8 நகரரங்களில் வணிக வளாகங்கள் மற்றும் பல கடைகள் இரவு 10 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கபட்டுள்ளது.

இந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவானது வரும் 17ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Spread the love
x