கால் ஒடிந்த எஜமானரை பார்த்து வளர்ப்பு நாய் செய்யும் செயல்..!

1 min read
dog-vidiyarseithigal.com

வாயில்லா ஜீவன்களில் மிகுந்த பாசமும், அன்பும் மனிதர்களிடம் கொண்டதாக இருப்பது நாய் தான். நாம் ஒருவேளை உணவிட்டாலே போதும் அது தன் வாழ்நாள் முழுவதும் நம்மீது அன்பு செலுத்தி கொண்டே இருக்கும்.

அதுபோல ஒரு நிகழ்வு தான் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிப்பவர் ரஸல் ஜோன்ஸ் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அவரால் எளிதாக நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து சென்றுள்ளார். ஒரு நாள் எக்ஸ்ரே எடுப்பதற்காக அவர் செல்ல அவருடன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றுள்ளார். அவர் நொண்டி செல்வதை பார்த்த நாய் அவரை போல நொண்டி நொண்டி அவருடன் நடந்துள்ளது.

அந்த நாயின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வருகிறது.

Spread the love
x