abuse: லேப்டாப்பில் புதுப்படங்களை காட்டுவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை..! இளைஞர் தலைமறைவு..!

1 min read
abuse-vidiyarseithigal.com

abuse

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் கடந்த 17ம் தேதி மனைவியுடன் கோயம்பேட்டில் உள்ள திரையரங்கு ஒன்றிக்கு மனைவியுடன் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த தன் தாயை பார்த்துக் கொள்ள 13 வயது சிறுமியை துணையாக விட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுமியோ படம் பார்க்க தன்னையும் அழைத்து செல்லுமாறு அடம்பிடித்துள்ளார்.

இருப்பினும் சிறுமியை விட்டு பெற்றோர்கள் மட்டும் படம் பார்க்க சென்றுள்ளனர். அந்த பகுதியில் வசித்து வரும் 21 வயது இளைஞர் வினோத் என்பவர் சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமானவர். அவர் செல்போனில் சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது சிறுமி பெற்றோர்கள் படம் பார்க்க தன்னை அழைத்து செல்லாததை பற்றி கூறியுள்ளார்.

சிறுமியின் வருத்தத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய வினோத் தன்னிடம் லேப்டாப்பில் படம் உள்ளதாகவும் வீட்டிற்கு வந்தால் அப்படத்தை காண்பிக்கிறேன் என கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆர்வத்தால் சிறுமி தன் பாட்டியிடம் தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

படம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது மாலை தாமதாக வந்த சிறுமியை விசாரித்த போது வினோத் செய்த பாலியல் வன்கொடுமை  பற்றி சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்ததை அடுத்து வினோத் தலைமறைவாகி உள்ளார். தலைமறைவான வினோத் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது போலீசார் வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Spread the love
x