anicka vikhraman and anoop pillai: முன்னாள் காதலானால் தொல்லை. உடலில் காயங்களுடன் பிரபல தமிழ் நடிகை..!

1 min read
anicka vikhraman and anoop pillai-vidiyarseithigal.com

anicka vikhraman and anoop pillai

உடலில் காயங்களுடன புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அனிகா விக்ரமன்.

விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து போன்ற தமிழ் படங்களிலும், பல்வேரு மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா விக்ரமன். இவர் பெங்களூரில் பிறந்தவர்.

கல்லூரி படிப்பை முடித்த இஅவருக்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் தான் கே என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்க பாட்டன் சொத்து, விஷமக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் அதிகமான படங்களை நடித்து வருகிறார்.

anicka vikhraman and anoop pillai-vidiyarseithigal.com

anicka vikhraman and anoop pillai

இவர் சமூக வலைதளத்தில் காயத்துடன் புகைப்படத்தை பதிவிட்டு தனது காதலன் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்தேன். ஆனால் அவர் என்னை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்தார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

எழுந்திருக்க கூட முடியல.. சிவாங்கியின் டிவிட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்து வந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் போலிசில் பணம் கொடுத்து தன்னை சிக்க வைத்ததாக கூறியுள்ளார். அதன் பின்னரும் அவரது தொல்லை தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

anicka vikhraman and anoop pillai-vidiyarseithigal.com

anicka vikhraman and anoop pillai

இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு விலக தயாராக இல்லை. நான் படப்பிடிற்கே சென்றுவிடக்கூடாது என்று விரும்பிய அவர், அதற்காக என் மொபைலை உடைத்தார்.

அதேநேரம் என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார். மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில், உச்சகட்டமாக என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

anicka vikhraman and anoop pillai-vidiyarseithigal.com

தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன்” இவ்வாறு நடிகை அனிகா விக்ரமன் தெரிவித்துள்ளார்.

உடல் முழுக்க காயங்களுடன் பிரபல நடிகை அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x