andhra pradesh latest news: காதலித்து திருமணம்…! பெற்றோரை விட்டு வர மறுத்த மனைவி..! கணவன் செய்த கொடூர செயல்..!

1 min read
andhra pradesh latest news-vidiyarseithigal.com

andhra pradesh latest news

ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு மனைவி வர மறுத்ததால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி . அவருக்கும் சிந்தாமாக்குலா பகுதியை சேர்ந்த டில்லி பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் டில்லி பாபுவிற்கு 21 வயது ஆகும் வரை காயத்ரி மற்றும் டில்லி பாபு தனித்தனியாக அவரவர் வீட்டில் வசிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டில்லி பாபு போலீசார் கூறியதை மறுத்து காயத்ரியை தன்னுடன் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தி உள்ளார். டில்லி பாபு வற்புறுத்தியும் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் காயத்ரி வரமறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த டில்லி பாபு காயத்ரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

காதல் கணவனே மைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x