நள்ளிரவில் தானாக நகர்ந்த பேருந்து..! வைரலாகும் திகில் cctv காட்சிகள் உள்ளே..!

1 min read
viral videos-vidiyarseithigal.com

ஆந்திர மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ராவூரு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்றினை ஒட்டுநர் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின்பு பேருந்து தானாக நகர்ந்துள்ளது. மெல்ல நகர்ந்த பேருந்து பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இருந்த தூணின் மீது மோதி நின்றுள்ளது.

நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் இல்லை . பயணிகள் இல்லாத காரணத்தினால் பெரிய விபத்து தவிர்க்கபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து தானாக நகர்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

video source : https://english.sakshi.com/video/videos-news/caught-cctv-camera-driverless-rtc-bus-moving-nellore-depot-129120

Spread the love
x