Tamil cinema news : ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்..? நடிகர் அப்பாஸ் பதில்…!!
1 min read![actor abbas-vidiyar](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/abbas-glyric-1024x576.jpg)
நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதில் காதல் நாயகனாக வலம் வந்தவர். இருப்பினும் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு க்ளிக் செய்யவும்
![abbas-vidiyar](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/15sli4-300x203.jpg)
ஆனால் அதன்பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் ஆனந்தமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.