மது போதையில் ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்..! நொடியில் நிகழந்த துயரம்..!

1 min read
விபத்து-vidiyarseithigal.com

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பூலுவபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் இவரின் நண்பர்கள் குட்டி, ஆனந்த், மற்றொரு பாலமுருகன் என்ற 4 பேர் மது அருந்தி உள்ளனர். அதித போதையில் 4 பேரும் ஒரே ஸ்கூட்டரில் கோவை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

ஈட்டி வீரம்பாளையம் பகுதியில் சென்ற போது, அதிவேகத்தில் சென்ற போது ஸ்கூட்டி டயர் பஞ்சராகி சாலை ஒரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பாலமுருகன், குட்டி ஆகியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு பாலமுருகன் மற்றும் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒரே ஸ்கூட்டரில் சென்ற 4 இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x