news online tamil: காதலுக்கு உதவியதால் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த நண்பனின் தந்தை…!
1 min read![news online tamil-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/news-online-tamil-1-1024x571.jpg)
news online tamil
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த அரசுநிலைபாளையத்தை சேர்ந்தவர் சேகர் . அவருக்கு வருண் என்ற மகன் உள்ளார் வயது 21. இவர் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
வாக்குவாதம்:
அந்த காதலுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் உதவியுள்ளார். இந்த விவகாரம் வருணின் தந்தை சேகர் அவ்வபோது திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மதுவில் விஷம்:
இந்நிலையில் நேற்று முன் தினம் திருமுருகனை மது அருந்துவதற்காக அழைத்து சென்ற வருணின் குடும்பத்தினர் . அதில் விஷம் கலந்து திருமுருகணுக்கு கொடுத்ததாக சொல்லபடுகிறது. மதுவில் விஷம் கலந்ததை அறிந்த திருமுருகன் தனது தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
![news online tamil-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/news-online-tamil-300x191.jpeg)
அங்கு வந்த அவர் திருமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு வந்து திருமுருகனின் உறவினர்கள் அவரின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.