Tamil online news: அட குரல் கொடுத்தால் போதுமா..! வித்தியாசமான செல்லபிராணிகள்..! உணவளித்து மகிழும் தம்பதி..!

1 min read
Tamil online news-vidiyarseithigal.com

Tamil online news:

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் சுதர்சனம் . இவருக்கு வயது 74. இவர் வேளாண் விற்பனைதுறையில் கண்காணிப்பாளராக இருந்து ஒய்வு பெற்றவர். இவரது பிள்ளைகள் வேலை காரணமாக வெளி ஊரில் வசித்து வரும் நிலையில் இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிகள் இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். தெருவில் ஆதரவற்று இருக்கும் நாய்களை வீட்டிற்கு அழைத்து வந்து உணவளித்து வளர்த்து வந்துள்ளனர்.

Tamil online news-vidiyarseithigal.comTamil online news

இது குறித்து பேசிய அவர் பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. பசியின் கொடுமை உனர்ந்ததாலே நாய், பூனை போன்றவற்றுக்கு கடந்த 30 நாட்களுக்கு மேலாக உணவளித்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் பருந்துகளுக்கும் உணவளித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

தினந்தோறும் மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து நின்று சத்தமிட்டதும் வட்டமிட்டு பருந்துகள் வந்துவிடும் என தெரிவித்தார். கீழே இருந்து தூக்கி எறிந்ததும் பருந்துகள் உணவை பிடித்து கொள்ளும் என்றும் அதைபோல மாடுகளுக்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டி வைத்து தாகம் தீர்த்து வருவதாக கூறினார்.

Spread the love
x