biggboss: பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை..!அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

1 min read
tamil cinema-vidiyarseithigal.com

biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு கோப்பையை வெல்ல விளையாடுகின்றனர். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் ஜெயஸ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டவர்.

கன்னடத்தில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக மன அழுதத்தில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என சொல்லபடுகிறது.

biggboss-vidiyarseithigal.com

biggboss

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது முகநூல் பக்கத்தில்  I Quit Goodbye to this world and Depression என பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் அந்த பதிவை நீக்கினார். மேலும் அதனை பப்ளிசிட்டிகாக பதிவிடவில்லை எனவும் தான் உண்மையிலேயே மன அழுதத்தில் இருப்பதாகவும் அவர் முகநூல் நேரலையில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அவர் நேற்று காலை தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர் இடையேயும் ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love
x