news update today: சங்கரன்கோவில் : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை..! 4 சிறுவர்கள் போக்சோவில் கைது..!

1 min read
news update today-vidiyarseithigal.com

news update today

தென்காசி மாவட்டம் சங்கரங்கோவில் ராமசாமியாபுரம் 3வது தெருவை சேர்ந்த சிறுவன் ஒருவர் ராஜபாளையம் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகள் திறக்கபடாத நிலையில் சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவன் அழுது கொண்டிருந்துள்ளான். அப்போது அந்த சிறுவனின் பெற்றோர் அவனை விசாரித்ததில் , சிறுவனின் மர்ம உறுப்பில் காயம் இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

news update today-vidiyarseithigal.com

மருத்துவமனையில் மருத்துவர்கள் விசாரித்த போது , தன்னுடன் விளையாட வரும் சிறுவர்கள் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுவன் கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் சங்கரங்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை திருநெல்வேலி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Spread the love
x