Online news: இருட்டு அறையில் வைத்து சித்ரவதை..! தாய் மற்றும் தந்தைக்கு மகன் செய்த கொடுமை..!
1 min readOnline news
பெற்றோர்களை இருட்டு அறையில் பூட்டி வைத்து உண்ண உணவு அளிக்க கொடுமைப்படுத்திய சம்பவம் கேரளாவில் நிகழந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அசம்பாணி என்ற பகுதியை சேர்ந்தவர் பொடியன். இவருக்கு வயது 80. அவரது மனைவி அம்மிணி வயது 78. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகனான ரெஜி எனவருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த பெற்றோர் என்று கூட பாராமல் தனது வீட்டில் உள்ள இருட்டு அறை ஒன்றில் ரெஜி அவர்கலை பூட்டி வைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் வழங்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார்.
மேலும் ரெஜி மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்ற உடன் அவரது பெற்றோரை அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட கூடாது என்பதற்காக ஒரு நாயை வீட்டின் முன் கட்டி வைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வயது முதிர்ந்தோர் குறித்து கணக்கெடுப்பு எடுக்க வந்த அங்கன்வாடி ஊழியர்கள் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து அவர்களை காப்பாற்றி உள்ளனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டதில் பொடியன் முன்னரே இறந்துவிட்டதாகவும், பொடியனின் மனைவி மனநிலை பாதிக்கபட்டவராக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொடியனின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பொடியனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியானது அதில் பொடியனின் உடலில் சிறிது அளவு கூட உணவு இல்லை . அதன் காரணமான குடல்கள் சுருங்கி உள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மகன் ரெஜி மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.