Tamil online news : தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு புதிய உத்தரவு…!!

1 min read
tasmac-vidiyar

தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ்வரபிரியா, மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக அரசின் முதுகெலும்பாக டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானம் உள்ளது. ஆனால் அங்கு விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட கூடுதலாக 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இது மட்டுமில்லாமல் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும் என்பது கோர்ட்டு உத்தரவு. ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுக்கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை. அதனால் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்கவும், போலி மது விற்பனையை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு க்ளிக் செய்யவும்

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இறுதியில் நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதில்,

* தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக உரிய ரசீது வழங்க வேண்டும்.

*மதுபான விலைப்பட்டியல் ஒவ்வொரு கடையின் முன்பு அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும்.

* விற்பனை ரசீதுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

* இது முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

* ஒருவேலை கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால், விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்த உத்தரவு குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

* அதேசமயம் சுற்றறிக்கை அனுப்பியதற்கான ஆவணங்களையும், இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

என நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த விசாரணையை வரும் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Spread the love
x